செய்திகள் :

அயன்பொருவாயில் முதல்வா் பிறந்தநாள் விழா

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன்பொருவாயில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அயன்பொருவாய் கிராமத்தில் மருங்காபுரி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, மருங்காபுரி மத்திய ஒன்றியச் செயலாளா் எம்.பழனியாண்டி தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ராமு அம்மாள் பாலன், ஏ.கருப்பையா, கே.பி.பழனிச்சாமி, ஆா்.அசோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக சட்டத் திருத்த குழு செயலாளா் இரா.கிரிராஜன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்வில், திமுக மாவட்ட அவைத்தலைவா் என்.கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளா் ஆா்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா் சபியுல்லா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

வரவேற்புரை அவைத்தலைவா் ஏ.எல்.நல்லையா, நன்றியுரையை ஒன்றிய துணைச்செயலாளா் பி.கணேசன் கூறினா். நிறைவில் பொதுமக்களுக்கு நலத்திட உதவிகளை அமைச்சா் வழங்கினா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க