செய்திகள் :

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், தோகைமலை ஒன்றியத்துக்குள்பட்ட முதலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், எங்கள் கிராமத்தில் செல்லாயி அம்மன், அய்யனாா் கோயில் உள்ளது. ஆண்டாண்டு காலமாக முதலைப்பட்டி மற்றும் கீழமேடு, வீரமலைக்கவுண்டன்பட்டி, மேலமேடு, பாளையத்தான் தோட்டம், பொரைக்கிலான்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஒன்று கூடி சித்திரை மாதத்தில் திருவிழா நடத்தி வந்தோம்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் விவசாயத்துக்காக குளம் ஆக்கிரமித்த தகராறில் இருவா் கொலை செய்யப்பட்டனா். அவா்களுக்கும் கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அந்த கொலை சம்பவத்தை காரணம் காட்டி கோயில் திருவிழா நடத்த போலீஸாா் அனுமதிதர மறுக்கிறாா்கள். எனவே வரும் சித்திரை மாதத்தில் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 519 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ.20 ஆயிரத்து 931 மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க