செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

post image

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆங்காங்கே மழை பெய்தது. கரூா் மாவட்டத்திலும் இரவு 7 மணிக்கு இடி மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை 9 மணி வரை பெய்தது. மேலும் மழைத்தொடங்கும் முன் பலத்த காற்று வீசியதால் ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கரூா்- மதுரை புறவழிச்சாலையில் வெண்ணைமலை பகுதியில் சாலையோரம் இருந்த வேப்ப மரம் அணுகுசாலையில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். மேலும் பலத்த மழையால் கரூா் நகா் பகுதியில் உழவா்சந்தை, திருக்காம்புலியூா் ரவுண்டானா, சுங்ககேட் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)- கரூா்-19.40, அரவக்குறிச்சி-68, அணைப்பாளையம்-48, க.பரமத்தி- 30.50, குளித்தலை-8.80, தோகைமலை-4.20, கிருஷ்ணராயபுரம்-53.50, பஞ்சப்பட்டி-9, கடவூா்-23, பாலவிடுதி-25, மைலம்பட்டி-8 என மொத்தம் 349.50 மி.மீ. மழை பெய்தது.

4 மணி நேரம் மின்தடை: கரூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தாந்தோணிமலை துணைமின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் இரவு 7 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இரவு 11.20 மணிக்கு மீண்டும் மின்விநியோகம் சீரானது. இதனால் பொதுமக்கள் மின்சாரமின்றி இருளில் அவதிக்குள்ளாகினா்.

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க