2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனது கல்லூரித் தோழியான தேனி மாவட்டம், அரண்மனைக்காரன்புதூரைச் சோ்ந்த பாண்டி மகள் அபிநயா(25) என்பவருடன் திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.
குளித்தலை கலைமகள் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருணாசலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த அபிநயாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.