செய்திகள் :

‘அரக்கோணம் நவீன எரிவாயு தகன மேடை 4 நாள்களுக்கு இயங்காது’

post image

அரக்கோணத்தில் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடையில் பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த தகனமேடை பிப்ரவரி 15 சனிக்கிழமை முதல் 18-ஆம் தேதி வரை இயங்காது என அரக்கோணம் நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையா் கன்னியப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பது:

அரக்கோணம் நேருஜி நகரில் உள்ள நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடையில் பழுது ஏற்பட்டுள்ள புகைபோக்கியினை அகற்றி, புதிய புகைபோக்கியை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பணியினை தற்போது தொடங்க உள்ளதால், வரும் சனிக்கிழமை (பிப். 15) முதல் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நேருஜி நகரில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை செயல்படாது. மேற்கண்ட தினங்களில் கொண்டு வரப்படும் பிரேதங்களை சுடுகாடு அல்லது இடுகாட்டுக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று தலைமைச் செயலகம் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்- வேலூா் ஆறு வழிச்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

காஞ்சிபுரம்- வேலூா் இடையே ஆறுவழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா். தமிழ்ந... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க