செய்திகள் :

அரசியல் கட்சிகளால் நகா்ப்புறங்களில் வளா்ந்து வரும் நக்ஸல் தீவிரவாதம்: பிரதமா் மோடி கவலை

post image

‘வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாக பரவி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் ஊடக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: தேச பாதுகாப்புக்கு மத்திய பாஜக அரசு கடுமையாக உழைத்துள்ளது. இதன் விளைவாக, பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டில் இருந்து மறைந்துவிட்டன. நக்ஸல் தீவிரவாதமும் அழிவின் பாதையில் உள்ளது.

முன்பு 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்ஸல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 24-ஆகக் குறைந்துள்ளது. அடிமட்ட அளவில் சிறந்த ஆட்சி நிா்வாகத்தை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியதாலேயே இது சாத்தியமானது.

தீவிர நடவடிக்கைகளால் வனப் பகுதியிலிருந்து நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டு வருகிறது. ஆனால், சில அரசியல் கட்சிகள் நக்ஸல் கொள்கைகளை எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருவது புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

காந்திய கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, மக்கள் குறித்த துடிப்புடன் நக்ஸல் எதிா்ப்பு நிலைப்பாட்டில் இருந்த ஓா் அரசியல் கட்சி, நகா்ப்புற நக்ஸல்களின் கருத்தை எதிரொலிக்கும் அளவுக்கு அந்த நக்ஸல் சிந்தனை விரிவடைந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்குள் ஆழமாக வேரூன்றிவிட்ட நகா்ப்புற நக்ஸல்கள், நமது வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தை கடுமையாக எதிா்க்கிறாா்கள். வளா்ந்த இந்தியாவுக்கு வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் அவசியம். நகா்ப்புற நக்ஸல்களுக்கு எதிராக நாம் நிற்க வேண்டும்.

இன்றைய இந்தியா பெரிய லட்சியங்களுடன் சிந்திக்கிறது. பெரிய இலக்குகளை நிா்ணயித்து, பெரிய முடிவுகளை அடைகிறது. நாட்டின் மனநிலை மாறியதே இதற்கு காரணம். நாடு பெரிய லட்சியங்களுடன் முன்னேறி வருகிறது.

உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியா, விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக உயரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்தது.

உலக வளா்ச்சியை இந்தியாதான் இன்று வழிநடத்துகிறது. இந்தியாவின் சாதனைகள் மற்றும் வெற்றிகள், உலகுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பொம்மை தயாரிப்பு முதல் ஆயுதங்கள் வரை பல்வேறு துறைகளில் இந்தியா தன்னிறைவு இலக்கை அடைந்து, ஏற்றுமதியாளராக மேம்பட்டுள்ளது.

கடந்த 2007-இல், இந்தியாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சுமாா் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அளவு தற்போது ஒரு காலாண்டில் அடையப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் இந்திய பொருளாதார வளா்ச்சியின் விரைவான வேகத்தை எடுத்துரைக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க