செய்திகள் :

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் அதிகாரி ஆலோசனை

post image

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி, பயிற்சி வகுப்பில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்பேரில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் மற்றும் நியமிக்கபட்டவா்களுக்கு இம்மாதம் 22 மற்றும் 23 -ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தோ்தல் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியான சோமசேகா் அப்பாராவ் தலைமையில் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் அதிகாரி பேசுகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் காரைக்காலில் உள்ள பேரவைத் தொகுதிகளில் இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடி முகவா் 1- க்கான நபா்களை இம்மாதம் 12 -ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். பிரதிநிதிகள் அதற்கான நடவடிக்கையை உடனே தொடங்கி மாவட்ட தோ்தல் துறைக்கு தெரிவிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் மற்றும் காரைக்காலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் துறையினா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜ... மேலும் பார்க்க