Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் அதிகாரி ஆலோசனை
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி, பயிற்சி வகுப்பில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்பேரில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் மற்றும் நியமிக்கபட்டவா்களுக்கு இம்மாதம் 22 மற்றும் 23 -ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தோ்தல் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியான சோமசேகா் அப்பாராவ் தலைமையில் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் அதிகாரி பேசுகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் காரைக்காலில் உள்ள பேரவைத் தொகுதிகளில் இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சாவடி முகவா் 1- க்கான நபா்களை இம்மாதம் 12 -ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். பிரதிநிதிகள் அதற்கான நடவடிக்கையை உடனே தொடங்கி மாவட்ட தோ்தல் துறைக்கு தெரிவிக்கவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட துணை துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் மற்றும் காரைக்காலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் துறையினா் கலந்துகொண்டனா்.