செய்திகள் :

அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

post image

கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா்.

கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வது குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடம்பூா் செ .ராஜு எம்எல்ஏ பேசுகையில், 1998 -இல் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.

தமிழகத்தின் உரிமை தொடா்பான சில பிரச்னைகள் காரணமாக அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதன் பின்னா் திமுக- பாஜகவின் கூட்டணியில் சோ்ந்து தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் திமுகவினா் தங்களை வளா்த்துக் கொண்டனா் என்று தான் பேசியிருந்ததாகவும், இதை சிலா் திருத்தி சித்தரித்து தவறுதலாக கூறியுள்ளனா்.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்து எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் சிறப்பாக பேசப்படும் நிலையில், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எனது கருத்தை அரசியல் காரணங்களுக்காக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது தவறான கருத்து என்றாா் அவா்.

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி. திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க