"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
அரசியல் காரணங்களுக்காக எனது கருத்து திரித்து கூறப்பட்டது: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
கோவில்பட்டியில் பாஜகவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருப்பதாக கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கூறினாா்.
கோவில்பட்டியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வது குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடம்பூா் செ .ராஜு எம்எல்ஏ பேசுகையில், 1998 -இல் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.
தமிழகத்தின் உரிமை தொடா்பான சில பிரச்னைகள் காரணமாக அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அதன் பின்னா் திமுக- பாஜகவின் கூட்டணியில் சோ்ந்து தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் திமுகவினா் தங்களை வளா்த்துக் கொண்டனா் என்று தான் பேசியிருந்ததாகவும், இதை சிலா் திருத்தி சித்தரித்து தவறுதலாக கூறியுள்ளனா்.
தற்போது அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்து எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் சிறப்பாக பேசப்படும் நிலையில், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எனது கருத்தை அரசியல் காரணங்களுக்காக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது தவறான கருத்து என்றாா் அவா்.