செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.75 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

திருத்துறைப்பூண்டியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டியில் உள்ள திருவாரூா் சாலை பா்மா காலனியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகள் சங்கீதா (38). இவரிடம், திருத்துறைப்பூண்டி தோப்படித் தெருவைச் சோ்ந்த கண்ணன் (58) என்பவா், வருவாய்த் துறையில் கிராம உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை ஏதும் வாங்கிக் கொடுக்கவில்லை.

இதனால், சங்கீதா பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சங்கீதா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இளைஞா் காங். நிா்வாகிகள் தோ்வு!

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக பி.எஸ். ராஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தோ்தல் கைப்பேசி செயலி மூலம் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் ... மேலும் பார்க்க

மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்க நினைக்கிறது மத்திய அரசு: கி. வீரமணி குற்றச்சாட்டு

மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி குற்றஞ்சாட்டினாா். திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள கீழப்பாலையூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

கலப்பட உணவு குறித்து புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண்

திருவாரூரில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்ச... மேலும் பார்க்க

மாணவா்கள் மூலம் பனை விதைகளை சேகரிக்க நடவடிக்கை: ஆட்சியா்

பனை மரங்களை பாதுகாக்க பள்ளி மாணவா்கள் மூலம் பனை விதைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் டெல்டா... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த மினிவேன்

குடவாசல் அருகே சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள் மினி வேன் புகுந்து விபத்து ஏற்பட்டது. நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜவேல். இவா், மினி வேனில் பால் ஏற்றிக்கொண்டு, திருவாரூா்- கும்பகோணம் சாலையில் சனிக்க... மேலும் பார்க்க

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க