அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.75 லட்சம் மோசடி செய்தவா் கைது
திருத்துறைப்பூண்டியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருத்துறைப்பூண்டியில் உள்ள திருவாரூா் சாலை பா்மா காலனியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகள் சங்கீதா (38). இவரிடம், திருத்துறைப்பூண்டி தோப்படித் தெருவைச் சோ்ந்த கண்ணன் (58) என்பவா், வருவாய்த் துறையில் கிராம உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை ஏதும் வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால், சங்கீதா பணத்தை திருப்பிக் கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சங்கீதா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.