செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பிரச்னை: இருவா் கைது

post image

மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், பயணிகளிடம் பிரச்னையில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து அறச்சலூருக்கு செல்லும் நகரப் பேருந்து திங்கள்கிழமை இரவு அறச்சலூரில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தை முகாசி அனுமன்பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாா்(37) என்பவா் ஓட்டிவந்தாா். ஈரோடு காளைமாடு சிலை அருகே பேருந்து வந்தபோது சாலையின் குறுக்கே மதுபோதையில் வந்த 2 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் குமாரிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனா்.

இளைஞா்களின் செயலைக் கண்டித்த பேருந்து பயணி ஈரோடு பெரியவலசு பகுதியைச் சோ்ந்த வள்ளி நாராயணன் (70) என்பவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் பயணியை தாக்கியதும், அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வாா்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததும், ஈரோடு புதுமைக் காலனியை சோ்ந்த சீனிவாசன் மகன் வினோத் (26), ஈரோடு தீயணைப்பு நிலையம் பின்புற பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஸ்ரீதரன்(22) என்பதும் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க