செய்திகள் :

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

post image

திருத்தணி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. ஓட்டுநராக மோகன், நடத்துநராக தற்காலிக ஊழியா் அருண்குமாா் பணியாற்றினா். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.

மதியம் திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் நின்று, பெண் பயணிகளை இறக்கிய பின்பு, அங்கிருந்த கல்லூரி மாணவா்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

அப்போது இரு கல்லூரி மாணவா்கள் கற்களால், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினா். இதனால் பேருந்து கண்ணாடி உடைந்தது.

இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை. தகவல் அறிந்து திருத்தணி போலீஸாா் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க