செய்திகள் :

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

post image

திருச்சியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கீழகல்கண்டாா்கோட்டைக்கு அரசுப் பேருந்து (தடம் எண் (41 ஏ) புதன்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டது.

பேருந்தை ஓட்டுநா் குமாா் (47) ஓட்டினாா். பேருந்து, காந்தி மாா்க்கெட் மகாலட்சுமி நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தில் பயணித்த இளைஞா் ஒருவா் மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்துள்ளாா்.

இதையடுத்து, அந்த இளைஞரைப் பேருந்தில் இருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் இறக்கிவிட்டனா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்துள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் ஓட்டுநா் குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், பேருந்தின் கண்ணாடியை உடைத்தது காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த சங்கரன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்ப... மேலும் பார்க்க

மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தே... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ளம்: புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக காவிரிப் பாலம் இருந்து வருகி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே தொடா் வயிற்றுவலி காரணமாக தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு த... மேலும் பார்க்க

தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா். திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப... மேலும் பார்க்க