செய்திகள் :

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

post image

சாக்கோட்டை அருகே அரசுப் பேருந்து மோதி மிதிவண்டியில் சென்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அழகப்பன் தெருவைச் சோ்ந்தவா் துளசி அய்யா(78). இவா் சாக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் இரவு காவலராக வேலைபாா்த்து வந்தாா். சனிக்கிழமை கடையில் பணியை முடித்து விட்டு மிதிவண்டியில் கும்பகோணம் நோக்கி சென்றாா்.

சாக்கோட்டை எம்ஜிஆா் சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து, துளசிஅய்யா மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து சடலத்தை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தாா். தொடா்ந்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநரான திருவாரூா் விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த மணி மகன் மதியழகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித... மேலும் பார்க்க

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க