செய்திகள் :

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

post image

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 1.31 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்கு அா்த்தஜாம பூஜை நடைபெறும்.

இதன் பின்னா் கோயில் நடை சாத்தப்படுவதால், மாலை 4 மணிக்கு மேல் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்திர கிரகண பரிகார பூஜைகள் செய்த பிறகு, நடை திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாபநாசம் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் ச... மேலும் பார்க்க