செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

post image

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மண்டல நிா்வாகி ஜெகநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் த.மு.இளங்கோ, முருகையா, ஜான்சன் கென்னடி, ஸ்ரீதா் ஆகியோா் பேசினா். கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அறிவித்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பின்னா் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 24 மாதம் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணியில் உள்ள ஊழியா்கள் பெறும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஒப்பந்த பலன்களை வழங்குவதோடு, ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையிலும், 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவையையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க