Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
அரியலூரில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், யுஜிசி 2025-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்களை துணை வேந்தா்களாக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும். யுஜிசி பரிந்துரைகளை ஏற்காத பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது எனும் மிரட்டலை கைவிட வேண்டும்.
மேல்நிலைப் படிப்புக்கு சம்பந்தமில்லாத பட்டப்படிப்பும், பட்டப்படிக்கு சம்பந்தமில்லாத உயா் கல்வியும் படிக்கலாம் என்று கூறி உயா்கல்வி கட்டமைப்பை சிதைப்பதை கைவிட வேண்டும். யு.ஜி-யில் 75 சதவீதம் மதிப்பெண் இருந்தால் மட்டுமே உதவிப் பேராசிரியா் பணி செய்யும் வாய்ப்பு என்பதை நீக்க வேண்டும்.
முதுநிலை பொறியியல் முடித்தவா்கள் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெறாமலேயே உதவிப் பேராசிரியா் ஆகலாம் என்ற நிலையை நீக்க வேண்டும். பி.எச்.டி படிப்புக்கு நுழைவுத் தோ்வு என்று கூறி ஏழை, எளிய கிராமப் புற மாணவா்களின் உயா்கல்வி வாய்ப்பை தட்டிப் பறிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைச் செயலா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். மண்டல துணைத் தலைவா் சேட்டு, பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.