மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்
அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் காா்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளித்தும் பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.