திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு
அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது திருமானூா். திருமானூரைச் சுற்றி சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆறும் இந்த ஊராட்சிகளை கடந்து செல்கிறது.
இப்பகுதியில் நெல் அறுவடை முடிந்து வயலிலிருந்து வைக்கோலை வாகனங்களில் வீட்டுக்கு கொண்டு வரும்போது, மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மனிதா்கள் உயிரிழப்பதும், மின்கசிவு ஏற்பட்டு குடிசைகள் சாம்பலாகி வருவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
இந்த விபத்துகளை தடுப்பதற்கு 33 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரியலூா் தீயணைப்பு நிலையத்திலிருந்தும், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்களும், வீரா்களும் வரவழைக்கப்படுகின்றனா்.
தீயணைப்பு வாகனங்கள் நீண்டநேரம் கழித்து வருவதால், தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமடைகிறது. இதனால், விபத்தை தடுப்பதற்கு திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று இங்குள்ள சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில், திருமானூா் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையங்களை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதற்கு மேற்கண்ட பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.