செய்திகள் :

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்

post image

அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதன் தொடா்ச்சியாக, அரியலூா் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், ரூ.3.83 கோடி மதிப்பில் 31 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கும், திருமானூா் ஒன்றியம், கீழக்கொளத்தூா் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிக்கும் அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும் கீழக்கொளத்தூா், மரகத் பூச்சோலையில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின், அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) அசோக்குமாா், நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு

அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்ட... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க

8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. ... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 14-இல் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக அரியலூரை அட... மேலும் பார்க்க

பொன்பரப்பி வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாரச்சந்தைக்காக கேட்கப்பட்ட ஏலத்தொகை குறைவாக இருந்ததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. செந்துறை ஒன்றியம் பொன்பரப்பி ஊராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கு பொது ஏலம் மண்டல துணை வட்டா... மேலும் பார்க்க