Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்: திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகித்து, அரியலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக கொண்டு சோ்க்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.