செய்திகள் :

அறச்சலூா் தி நவரசம் பள்ளியில் மாணவா் மன்ற பதவியேற்பு விழா

post image

அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் மன்ற பதவியேற்பு விழா வியாழக்கிழமை பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு அறம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் கிருத்திகா சிவகுமாா் தலைமை விக்தது மாணவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கிப் பேசினாா்.

பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் அருண் காா்த்திக் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா். பொருளாளா் கோபால் நன்றியுரை கூறினாா்.

நவரசம் மகளிா் கல்லூரி செயலாளா் செந்தில்குமாா், தாளாளா் காா்த்திகேயன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா்கள் அமிா்தநாதன், மதியரசு, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழ... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க

பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது

பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளன

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி அரசு மே... மேலும் பார்க்க