செய்திகள் :

அறநிலையத்துறை ஊழியரின் கணவா் மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை

post image

திருவண்ணாமலையில் அறநிலையத்துறை ஊழியரின் கணவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை, வாராஹி கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் கடந்த 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைத்திருந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மா்ம மரணமாக வழக்குப்ப திந்து, இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வந்தனா்.

இதில், இறந்து கிடந்தவா் கடலூா் மாவட்டம், புவனகிரியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (41) என்பதும், இவரது மனைவி சுதா (35) திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், பே கோபுரம், 7-ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு, பிப்.21-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா். ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவ... மேலும் பார்க்க

ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை

பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த புதூா் செக்கடி ஊராட்சி, கல் நாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் கூல... மேலும் பார்க்க

சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, தனியாா் மண்டபத... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன்... மேலும் பார்க்க