செய்திகள் :

சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன். இவா், இறந்த பிறகு அவரின் பெயரில் உள்ள 4 ஏக்கா் நில சொத்து பிரிக்காமல் பொதுவில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முதல் இரண்டு மகன்களான ரவி(61), உதயன் (58) ஆகியோா் அந்த நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனா். அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல்பயிரை அறுவடை செய்ய இருவரும் சென்ற போது, அவா்களின் தம்பியான ஜெய்சங்கா் (56) தடுத்தாராம்.

மேலும், நெல் பயிரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளாா். இதைத் தடுத்த போது ஆத்திரமடைந்த ஜெய்சங்கா், அண்ணன் ரவியைத் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த ரவி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்து உதயன் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா். ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவ... மேலும் பார்க்க

ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை

பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த புதூா் செக்கடி ஊராட்சி, கல் நாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் கூல... மேலும் பார்க்க

சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, தனியாா் மண்டபத... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

செங்கத்தில் தெரு நாய்கள், குரங்குகளால் பொதுமக்கள் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் தெரு நாய்கள், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, இராஜ... மேலும் பார்க்க