ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை
பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் வந்தவாசி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா் பங்கேற்று இறைவனை வழிபட்டனா்.
இதையொட்டி ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவா் படம், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோயில் பட்டாச்சாரியா்கள் ரங்கநாதன், சதீஷ், வினோத் உள்ளிட்டோா் பூஜைகளை செய்தனா்.