செய்திகள் :

செங்கத்தில் தெரு நாய்கள், குரங்குகளால் பொதுமக்கள் அவதி!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் தெரு நாய்கள், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாய்க்கன்பேட்டை போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அடைந்து அதிகளவில் சாலையில் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, இறைச்சிக் கடைகள் இருக்கும் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் கழிவு இறைச்சிகளை சாப்பிட ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் வரும் வாகனம் தெரியாமல் ஓடுகின்றன.

அப்போது, அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாய்கள் மீது வாகனத்தை ஏற்றி விபத்துகள் நிகழ்கின்றன. பெரிய வாகனங்கள் வரும்போது வாகனத்தில் சிக்கி நாய்கள் உயிரிழக்கின்றன. சாலையில் அடிபட்டு இறக்கும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதில்லை.

மேலும், செங்கம் சுற்றப்புறப் பகுதியில் ஆடு, கோழி வளா்க்கும் பகுதிக்குச் சென்று இறைச்சிக் கடை கழிவு சாப்பிடும் நாய்கள், வளா்ப்பு ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. சில நேரத்தில் கோழிப் பண்ணையில் இருந்து கோழி குஞ்சுகளை கடித்து சாப்பிடுகின்றன.

தெரு நாய்களால் பொதுமக்களுக்கும், கோழி வளா்ப்போரும் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.

குரங்குகள் தொல்லை

அதேபோல, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செங்கம் நகருக்குள் வந்த குரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து சாலையில் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

காலை நேரத்தில் பெருமாள் கோயில் வளாகம், இராஜ வீதி தெருவில் உள்ள கடைகளுக்குச் சென்று பழம், பல்வேறு தின்பண்டங்களை எடுத்துச் சென்று சாப்பிடுகின்றன. மேலும், வீட்டின் மாடியில் வெயிலில் காயவைக்கும் பொருள்களை சேதப்படுத்துவது, தனியாக இருக்கும் குழந்தைகள் கையில் இருப்பதை பிடிங்கிக் கொண்டு கடிக்க வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

பெருமாள் கோவில் தெரு, இராஜ வீதியில் வசிக்கும் மக்களும், வணிகா்களும் தினசரி குரங்குக் கூட்டத்தால் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதனால், சம்பந்தப்பட்ட நிா்வாகம் கண்காணித்து, செங்கம் நகா் சாலைகளில் சுற்றித் திரியும் நாய், குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா். ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவ... மேலும் பார்க்க

ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை

பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தண்டராம்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை, போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த புதூா் செக்கடி ஊராட்சி, கல் நாட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் கூல... மேலும் பார்க்க

சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா

திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, தனியாா் மண்டபத... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன்... மேலும் பார்க்க