செய்திகள் :

அறை முழுக்க சிகரெட் பாக்கெட், கஞ்சா புகை... மாணவியை விடுதியில் இருந்து நீக்கிய டாடா கல்லூரி

post image

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள் மும்பைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதால், மும்பையில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது. பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த விவகாரத்தில் கைதாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்பை தேவ்னார் பகுதியில் உள்ள டாடா சோசியல் சயின்ஸ் கல்லூரி நாடுமுழுவதும் பிரபலமானது. இங்கு படிக்கும் மாணவிகளுக்காக பிரத்யேகமாக 3 விடுதிகள் உள்ளது.

இந்த விடுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் தனது வார்டனிடம் தன்னை வேறு அறைக்கு மாற்றும்படியும், தனது அறை எப்போது புகை நிரம்பி மிகவும் அழுக்காக இருப்பதாகவும், தனது அறையில் இருக்கும் மாணவி மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் புகார் செய்திருந்தார். அப்புகாரை தொடர்ந்து பேராசிரியர் ஒருவர் மற்றொரு ஊழியருடன் சேர்ந்து அந்த அறையை சோதனை செய்தார்.

அங்கு காலி சிகரெட் பாக்கெட், ரோலிங் பேப்பர், மாணவியின் பேக்கில் கஞ்சா போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பேராசிரியர் அந்த அறைக்கு சீல் வைத்தார். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தியது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மாணவி தனது பேக்கில் யாரோ கஞ்சாவை வைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அம்மாணவி விடுதியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. மாணவி படிப்பை தொடர அனுமதிப்பது என்றும், போலீஸாரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க