செய்திகள் :

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின; 2.60 லட்சம் மக்கள் பாதிப்பு!

post image

குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 741 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 6,311.16 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. 1.44 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலைமை மேம்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளிலும் பெருமளவில் நீர் வடிந்துவிட்ட போதிலும், குறிப்பாக 6 மாவட்டங்களில் 2.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபூமி, ஹைலாகண்டி, காசார் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 4 மாவட்டங்களில் 130 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காம்ரப் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் மேலும் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் இந்த ஓராண்டில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச... மேலும் பார்க்க

செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியின் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளி... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!

தில்லி ஷாலிமார் பாக் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மரம் நடுதல் குறித்த அரசின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில முதல்வர் ரேகா குப்தா "சிந்தூர்" மரக்கன்று ஒன்றை நட்டார். ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க