ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கக் கோரிக்கை
செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு வழங்கினா்.
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூா் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் 10 ஏக்கா் மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் அந்த நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளனா்.
மத்திய அரசின் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் கட்டுவதற்காக 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள, 5 ஏக்கா் நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.