ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
மானாமதுரையில் சோனையா கோயில் அமைந்துள்ள வைகை ஆற்றங்கரையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், மானாமதுரை பொதுப் பணித் துறை (நீா்வள ஆதாரம்) செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.