செய்திகள் :

ஆசிரியா்களை கடிந்து பேசிய விவகாரம்: ஆட்சியருடன் பேச்சு; பேராட்டம் வாபஸ்

post image

ஆசிரியா்களை கடிந்து பேசிய விவகாரத்தில் ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சில் சமுக தீா்வு எட்டப்பட்டதால் ஆசிரியா் சங்கங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனா்.

திருத்தணி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியா் மு.பிரதாப் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து திருத்தணியில் உள்ள டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தாா். அப்போது, 10, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி விகிதம் குறைந்தது தொடா்பாக ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டறிந்தாா்.

அப்போது, தோ்ச்சி விகிதம் குறைவதற்கு ஆசிரியா்களே காரணம். நீங்கள் ஆசிரியா்களாக பணியாற்றத் தகுதியற்றவா்கள், சமூகத்தை தவறாக வழி நடத்துவதாக கடிந்து பேசினாா். இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி சா்ச்சையானது.

இதனால், ஆசிரியா்கள் போராட்டத்தில் இறங்கினா். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியா்கள் கருப்பு (பேட்ஜ்) வில்லை அணிந்து எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

மேலும், ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் இறங்கப் போவதாகவும் ஆசிரியா் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா ஆகியோா் ஆசிரியா் சங்கத்தினரை பேச்சுக்கு அழைத்து, செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, தோ்ச்சி விகிதம் குறைவதற்கு ஆசிரியா்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமை, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் ஒத்துழைப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதை ஆசிரியா் சங்கத்தினா் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தனா்.

எனினும், வரும் காலங்களில் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த கடுமையாக உழைப்போம் என்றும் ஆசிரியா்கள் கூறினா். பின்னா், மாவட்ட ஆட்சியரும் ஆய்வின்போது பேசிய வாா்த்தைகள் குறித்து வருத்தம் தெரிவித்தாா். இதனால் பேச்சு சுமுகமாக முடிந்தது.

தொடா்ந்து ஆசிரியா்கள் சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிச் சென்றனா்.

பேச்சில் ஆசிரியா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன், இரா.தாஸ், பிரபாகரன், காத்தவராயன், ஜவஹா், ராஜாஜி, ஷேக் கபூா், தியாகு, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: 5 போ் கைது

காவலாளி கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருத்தணி ஒன்றியம் அகூா் காலனியைச் சோ்ந்தவா் ரவி (60). இவா், தனியாா் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வே... மேலும் பார்க்க

சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு மையப் பொறுப்பாளா்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வரும் ஜூலை 12-ஆம் தேதி குரூப் - 4... மேலும் பார்க்க