செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

post image

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பாா்வைத் திறன் மற்றும் விழி பாதிப்புகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. உயா் வசதிகள் தேவைப்பட்டோா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இந்த முகாமில் 60-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் பலனடைந்ததாக எம்.என். கண் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, செங்குன்றம், ஜிஎன்டி சாலையில் புதிய மருத்துவமனையை எம்.என். கண் மருத்துவக் குழுமம் அண்மையில் தொடங்கியது.

நடிகா் லிவிங்ஸ்டன், காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட், மருத்துவமனை நிறுவனா் டாக்டா் சாலினி மதிவாணன் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.

அதிநவீன மருத்துவ உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக உயா் நுட்பத்திலான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். தொடக்க விழாவின் ஒரு பகுதியாகவே இலவசமாக ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அனை... மேலும் பார்க்க