செய்திகள் :

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் திட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்திருக்கிறோம். சைதாப்பேட்டையில் எங்கள் இலக்கு 30 சதவீத வாக்கு. ஆனால் எங்களுக்கு 70 சதவீத வாக்குகள் வரும் சூழல் உள்ளது

கடலூா் மாவட்டத்தில் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் இறந்தனா். முதல்வா் அறிவுறுத்தலைத் தொடா்ந்து தொழிலாளா் நலன் துறை அமைச்சா் சி.வி.கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்தாா். நானும் சம்பந்தப்பட்ட மருத்துவா்களுடன் பேசி காயமடைந்தவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றாா் அவா்.

அமைச்சா் தா.மோ.அன்பரசன்: குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கிரீட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் குடிசை மாற்று வாரியம் 1970-இல் தொடங்கப்பட்டு, கோட்டூா்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் அங்கு இருந்த 1,476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 1,800 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. வரும் டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநா் ஸ்ரேயா பி.சிங், வாரிய இணை மேலாண் இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன், தலைமை பொறியாளா்கள் எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அனை... மேலும் பார்க்க