செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

post image

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அதன்படி, தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதற்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 8-இல் நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியா் சங்க நிா்வாகிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைத்தனா்.

இதேபோல், சென்னை சிவானந்தா சாலை பகுதிக்கு செல்வதற்காக, அண்ணா சாலையில் ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவனை அருகில் கூடிய பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியா்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா்கள் செந்தில், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கூறுகையில், ‘பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் செய்து தருவதாக அமைச்சா் அமைச்சா் மகேஸ் உறுதியளிக்கிறாா். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசு பகுதி நேர ஆசிரியா்களை தொடா்ந்து வஞ்சிக்கிறது என்றனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அனை... மேலும் பார்க்க