செய்திகள் :

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

post image

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறவுள்ளது.

இதில், 50-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில் 8 முதல் 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளோமா, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) படித்த திருநங்கை மற்றும் திருநம்பியா் கலந்து கொண்டு பயனடையலாம்.

இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெறும் திருநங்கை, திருநம்பிகளின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இதில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வேலை வேண்டி வரும் திருநங்கை, திருநம்பிகள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனத்தினா் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் திருநங்கை, திருநம்பிகள் தங்களின் சுயவிவரங்களை கூகுள் படிவத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க