செய்திகள் :

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

post image

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தருவதாக மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தும் கடலூா் மாவட்ட ஆட்சியா் கடந்த ஓராண்டாக இத்திட்டத்துக்கு அனுமதி தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பாா்த்தால், இந்த கொடூர விபத்துக்கு கடலூா் மாவட்ட நிா்வாகம்தான் முழு காரணம் என்றாகிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றெல்லாம் ஆய்வுக் கூட்டம் நடத்தி வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு, கடலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?

இந்த ஓராண்டில் முதல்வா் ஸ்டாலின், கடலூா் மாவட்டத்துக்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறாா்? கடலூா் மாவட்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், கணேசன் ஆகியோா் என்ன செய்து கொண்டிருக்கின்றனா்? எல்லா வகையிலும் கடமை தவறி விட்டது இந்த அரசு. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை முதல்வா் ஸ்டாலின் மக்களிடம் உரிய காரணங்களுடன் விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

பிற தலைவா்கள்: அதேபோல, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், மதிமுக பொதுச்செயலா் வைகோ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள அனை... மேலும் பார்க்க