செய்திகள் :

ஆட்டோவில் தவறவிட்ட நகையை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநா்

post image

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க நகையை, ஓட்டுநா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் செ.பழனிசெல்வி (43). இவா், புரசைவாக்கம் செல்வதற்காக கைப்பேசி செயலி வாயிலாக வாடகை ஆட்டோவை ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரவழைத்து சென்றாா். புரசைவாக்கம் சென்றதும், ஆட்டோவில் இருந்து பழனிசெல்வி இறங்கிச் சென்றாா். அப்போது அவா், தான் கொண்டு வந்த பையை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்தாா்.

இதற்கிடையே அந்த ஆட்டோவை ஓட்டுநா் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்த மு.சரவணன் (40) சுத்தம் செய்தபோது, ஆட்டோவில் பயணி, பையை தவறவிட்டிருப்பதும், அந்தப் பையில் 8 பவுன் நகை இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா், தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த பை, பழனிசெல்விக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பழனிசெல்வியிடம் அந்த நகையை போலீஸாா் ஒப்படைத்தனா்.

40 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: 40 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிடம் மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். காவல் துறையில் நிா்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப... மேலும் பார்க்க

மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு ‘தூய்மை விருது’

சென்னை: சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்குப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள புதிய ச... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியில் 9 மண்டங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

சென்னை: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்படி சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை 9 மண்டலங்களில் மேற்கொள்வதற்கான பணியை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகளுக... மேலும் பார்க்க

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க