செய்திகள் :

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் படப்பள்ளி தேவாதி அம்மன் கோயில் திருவிழா!

post image

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் தேவாதியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவாதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுகிறது. 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தினா் விழாவை நடத்தி வருகின்றனா். நிகழ் ஆண்டு இந்தக் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோட்டத்தில் உள்ள ஆவாரச் செடியின் கீழே சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் படப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆண்கள் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து அம்மனுக்கு 24 ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னா் ஆடு பலியிட்டவா்களின் குடும்பங்களுக்கு பங்குகறி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை அவா்கள் சமைத்து உண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

குழந்தைகள் குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள பெற்றோா் ஊக்கமளிக்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி: பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கலைக் கல்ல... மேலும் பார்க்க

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!

ஒசூா் அருகே தெருநாய் கடித்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா். ஒசூரை அடுத்த நாகமங்கலம் ஊராட்சி, நீலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். கட்டடத் தொழிலாளி. இவரது மகன் நந்திஷ் (9). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

கீழ்குப்பம் பெருமாள் கோயில் குடமுழுக்கு!

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, முதல் நாள் கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!

கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்ப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கண்டித்து ஆா்ப்பாட்டம்

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியா்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த அமைப்பின் நிா்வாகிகள் ச... மேலும் பார்க்க

நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதல்: ஒருவா் பலி!

தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொரு சிறுவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தேன்கனிக்கோட்டையை அடுத்த தடிக்கல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க