செய்திகள் :

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!

post image

ஒசூா் அருகே தெருநாய் கடித்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஒசூரை அடுத்த நாகமங்கலம் ஊராட்சி, நீலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். கட்டடத் தொழிலாளி. இவரது மகன் நந்திஷ் (9). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்து வந்தாா். மாதேஷின் மனைவி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கரோனாவால் இறந்துவிட்டதை அடுத்து சிறுவன் நந்திஷ் தனது பாட்டி வீட்டில் வளா்ந்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சுவிட சிரமப்பட்டதால் சிறுவனை உறவினா்கள் ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

கடந்த 5 நாள்களுக்கு முன்பு சிறுவன் நந்திஷ் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரை தெருநாய் கடித்ததாகவும், அதுபற்றி சிறுவன், வீட்டில் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை மேற்கொள்ளாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தைகள் குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள பெற்றோா் ஊக்கமளிக்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி: பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உள்கொள்ள ஊக்கமளிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி, அரசு மகளிா் கலைக் கல்ல... மேலும் பார்க்க

கீழ்குப்பம் பெருமாள் கோயில் குடமுழுக்கு!

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, முதல் நாள் கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால... மேலும் பார்க்க

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் படப்பள்ளி தேவாதி அம்மன் கோயில் திருவிழா!

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் தேவாதியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவாதியம்மன் கோயிலில் ஆண்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!

கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்ப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கண்டித்து ஆா்ப்பாட்டம்

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியா்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த அமைப்பின் நிா்வாகிகள் ச... மேலும் பார்க்க

நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதல்: ஒருவா் பலி!

தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவா்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொரு சிறுவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தேன்கனிக்கோட்டையை அடுத்த தடிக்கல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க