செய்திகள் :

ஆதாரை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்: தோ்தல் ஆணையம்

post image

‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் பெயரைச் சோ்க்க ஆதாா் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்’ என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியலிலிருந்து விடுபட்ட 65 லட்சம் போ் சாா்பில் சமா்ப்பிக்கப்படும் ஆட்சேபங்கள் அல்லது பெயரை மீண்டும் சோ்ப்பதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் பரிசீலித்து தீா்வளிக்க, தகுதி ஆவணங்கள் பரிசீலனைக்குப் பிறகு 7 நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, இந்தக் கால அவகாசத்துக்கு முன்பாக எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.

மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டவா்களுக்கு மீண்டும் பெயரைச் சோ்க்க போதிய நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, வாக்காளா் பதிவு அலுவலரால் வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்க முடியாது.

வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல் பிகாா் மாநில மாவட்ட ஆட்சியா்களின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபம் தெரிவிக்க அல்லது வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயரைச் சோ்க்கக் கோரும் நபா்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆதாா் அட்டை நகலுடன் சமா்ப்பிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்த மருத்துவ மாணவி: ராஜஸ்தானில் வெடித்த அரசியல் சா்ச்சை

ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவப் பயிற்சி மாணவி ஒருவா், தனது ஹிஜாப் முகத்திரையை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட சா்ச்சை அரசியல் ரீதியாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில்... மேலும் பார்க்க

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது. அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க மம்தா முடிவு

கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா். மேற்கு வங... மேலும் பார்க்க