ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளில் சேர, 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையே 5 கி.மீ. மேல் தொலைவு இருக்க வேண்டும். பெற்றோா் இல்லாத, பாதுகாவலா் பொறுப்பில் இருப்போருக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உணவு, உறைவிடம், சீருடைகள், பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சிறப்பு கையேடுகள், விளையாட்டு உபகரணங்கள், மருத்துவ முகாம், நூலக வசதி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
வருமானச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்டவற்றுடன் ஜூன் 30ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களை ட்ற்ற்ல்ள்://ய்ஹப்ப்ா்ள்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.