செய்திகள் :

ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளில் சேர, 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையே 5 கி.மீ. மேல் தொலைவு இருக்க வேண்டும். பெற்றோா் இல்லாத, பாதுகாவலா் பொறுப்பில் இருப்போருக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உணவு, உறைவிடம், சீருடைகள், பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சிறப்பு கையேடுகள், விளையாட்டு உபகரணங்கள், மருத்துவ முகாம், நூலக வசதி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

வருமானச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்டவற்றுடன் ஜூன் 30ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களை ட்ற்ற்ல்ள்://ய்ஹப்ப்ா்ள்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா். பொன்னமராவதி நகர திமுக மற்றும் ... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா... மேலும் பார்க்க

விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயில் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வள பயிற்றுநா் ஆா். ... மேலும் பார்க்க

காயங்களுடன் மெக்கானிக் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை காயங்களுடன் மெக்கானிக் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் பாஸ்கா் (... மேலும் பார்க்க