செய்திகள் :

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்ப அரசு அனுமதியளித்துள்ளது.

விளாத்திகுளம் வட்டம் ஒ.லட்சுமிநாராயணபுரம், கயத்தாறு வட்டம் கரிசல்குளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் தலா ஓா் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், கயத்தாறு வட்டம் திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடமும் காலியாக உள்ளன.

பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் ரூ. 15 ஆயிரமும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியானோா் மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலகத்தில் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் எழுத்துமூலமாகவோ, நேரடியாகவோ, அஞ்சல் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் மதுவிலக்கு அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம்... மேலும் பார்க்க