ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
ஆத்தூரிலிருந்து 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
ஆத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புதிய பேருந்துகளையும், ஆத்தூா் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு மானியம் 2023-24ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ. 12 லட்சத்திலான 2 புதிய மினி டிப்பா் லாரிகளையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போக்குவரத்துத் துறையின் தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் பணிமனை மேலாளா் ஜெகதீசன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனகா், விவசாய அணி துணைஅமைப்பாளா் மாணிக்கவாசகம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், செங்குழி ரமேஷ், நவீன்குமாா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், செயல் அலுவலா் பாபு, புன்னைக்காயல் முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஒன்றிய துணைச் செயலா்கள் பக்கீா்முகைதீன், ஜெயக்கொடி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் மாரிமுத்து, ரகுராமன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், துணை அமைப்பாளா் லிங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலாத்தூா் வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் அந்த வழியோரக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.