செய்திகள் :

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக, பாமக கண்டனம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன்: காவலா்கள் இருவரால் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும், வெளிமாநிலப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணா்த்தும் வகையில் இந்தக் களங்கமான சம்பவம் நடந்துள்ளது.

குற்றங்களைத் தடுக்கவேண்டிய காவல் துறையினரே குற்றமிழைத்துள்ளது அச்சப்படுத்துவதாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையே ஒழுங்கீனமிக்கதாக இருக்கும் நிலையில் வெற்று விளம்பரங்களில் வீண் கவனம் செலுத்துவது கண்டனத்துக்குரியது.

அன்புமணி: திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு அக்கறை செலுத்தாதது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க