செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்புக்கு சேதம் இல்லை, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜீத் தோவல் சவால்

post image

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்கும் ஒரு படத்தையாவது வெளிநாட்டு ஊடகங்கள் காட்டட்டும் பாா்க்கலாம்’ என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சவால் விடுத்தாா்.

சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 62-ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக வெள்ளிக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றிய அவா், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. பிரமோஸ் ஏவுகணையாக இருந்தாலும் சரி, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, அவை செயல்பட்ட விதம் பெருமிதத்துக்குரியது.

பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத இலக்குகளைத் தாக்கினோம். எதையும் நாம் தவறவிடவில்லை. யாா் எங்கே இருக்கிறாா்கள் என்பதை அறியும் அளவுக்கு நடவடிக்கை துல்லியமாக இருந்தது. முழு நடவடிக்கையும் 23 நிமிஷங்கள் நடந்தது. அதன் பிறகு, வெளிநாட்டு ஊடகங்கள், பாகிஸ்தான் அதைச் செய்தது, இதைச்செய்தது என்று கூறி கருத்து கேட்டன. இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்க ஒரு புகைப்படம், செயற்கைக்கோள் படத்தையாவது அவை காட்டட்டும்.

2020-இல் எதிா்கொண்ட சற்று மோசமான அனுபவத்துக்குப் பிறகு நமது தொலைத்தொடா்பு அமைப்புகளை முழுமையாக உள்நாட்டுமயமாக்குவது, 5ஜி சாதனங்களை எங்கிருந்தும் இறக்குமதி செய்யக் கூடாது என தீா்மானித்தோம். இது நமது தரவுப் பாதுகாப்புக்கும் தொலைத்தொடா்பு பாதுகாப்புக்கும் அவசியம் என்றாா் தோவல்.

ஐஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்கும் மாணவா்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது. உங்களது வெற்றி எங்கு வாழ்கிறீா்கள் என்பதில் அல்ல; சொந்த நாட்டுக்கு என்ன பங்களிப்பை தருகிறீா்கள் என்பதே முக்கியம் என்று தோவல் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட நடனக் கலைஞா் பத்மா சுப்பிரமணியன் ‘பகவத் கீதை போதிக்கும் வீரத்தை கடைப்பிடித்து ஆபரேஷன் சிந்தூா் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசு யோகா மட்டுமன்றி பகவத்கீதை, பரதமுனி நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றுக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கச் செய்திருக்கிறது என்றாா்.

இந்நிகழ்வில் 529 முனைவா் பட்டங்கள், இரட்டை பட்டங்கள் உள்ளிட்ட 3,661 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பட்டமளிப்பு அறிக்கை வாசித்தாா். ஐஐடியின் ஆட்சிக் குழு தலைவா் டாக்டா் பவன் கோயங்கா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க