செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சையில் கைதான இன்ஸ்டா பிரபலம்: புகாரளித்தவர் மாயம்!

post image

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு விடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்துக்கு எதிராகப் புகாரளித்தவர் தற்போது மாயமாகியுள்ளார்.

புணே சட்டக் கல்லூரி மாணவியான ஷர்மிஸ்தா பனோலி (வயது 22) என்பவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகவும் செயலாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ஒரு விடியோவை இவர் பகிர்ந்து, பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கொல்கத்தா காவல் துறையினர் கடந்த மே 30 ஆம் தேதி அவரை கைது செய்தனர். இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் வரும் ஜூன் 13 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதன்பின்னர், பல்வேறு முக்கிய பாஜக தலைவர்களும் பனோலிக்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வந்தனர். மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த வஜாத் கான் என்பவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், வஜாத் கான் தற்போது மாயமாகியுள்ளதாகவும், அவரைக் காணாவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளனர். இத்துடன், பனோலி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, வஜாத் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று, வஜாத் கானுக்கு எதிராக கொல்கத்தா காவல் நிலையத்தில் ஸ்ரீராம் ஸ்வபிமன் பரிஷாத் எனும் அமைப்பின் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

அதில், வஜாத் கான் சமூக ஊடகங்களில், ஹிந்து சமூகத்துக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பி வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், அவரது சமூக வலைதளப் பதிவுகளினால், வஜாத் கான் மீது அசாம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், அசாம் காவல் துறையினர் மேற்கு வங்கம் சென்று வஜாத் கானை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவார்கள் என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அயோத்தி 2-ம் கட்ட கும்பாபிஷேகம் தொடங்கியது! பக்தர்கள் வர வேண்டாம்!

எஃப்டிஐ கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நிய நேரடி ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ கூட்டணியுடன் வா்த்தக ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக பராகுவே அதிபா் சான்டியாகோ பெனா பலாசியோஸ் நம்பிக்கை தெரிவித்... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு: பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

பிரதமா் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்டு மாா்லஸ் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு ஆஸ்திர... மேலும் பார்க்க

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமாகாது: ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கண்டனம்

‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழம... மேலும் பார்க்க

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் ... மேலும் பார்க்க

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா-பிரான்ஸ் இடை... மேலும் பார்க்க