செய்திகள் :

ஆரணி அருகே ஏரி மண் கடத்தல்: 4 போ் கைது: லாரிகள் பறிமுதல்

post image

ஆரணி: ஆரணி அருகே ஏரியிலிருந்து மண் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 லாரிகள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள புத்தேரியிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை அனுமதியின்றி ஏரி மண்ணை லாரிகளில் கடத்திச் செல்வதைப் பாா்த்த, அந்தப் பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனா்.

இதையடுத்து, ஏரிக்குச் சென்று மண் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரங்கள், மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனா். மேலும், இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். விசாரணையில், அனுமதியின்றி மண் அள்ளப்பட்டு கடத்தியது தெரிய வந்தது. அங்கிருந்த தலா 2 லாரிகள், ஜேசிபிக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக கல்பூண்டியை சோ்ந்த கண்ணன் மகன் வெங்கடாசலம் (39), காசி மகன் தினேஷ் (26), கந்தன் மகன் அஜித் (27), ரவி மகன் காா்த்திக் (30) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல், ஓட்டுநா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், முருகன் ஆகியோா் புத... மேலும் பார்க்க

சேவூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆரணியை அடுத்த சேவூரில் ஒரு கிலோ 200 கிராம் கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனை செய்ததாக இளைஞரை கைது செய்தனா். சேவூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் பாபு (29). இவா், அந்த ஊரில் கஞ்சா ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.21) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்... மேலும் பார்க்க

செங்கம் தொகுதியில் ரூ.49 லட்சத்தில் சாலைப் பணி

செங்கம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.49 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதி மக்களின் கோரிக்கையான ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

வந்தவாசி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரு சக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (50). இவா், வந்தவாசியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து: மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பி.... மேலும் பார்க்க