அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்!
ஆரணியில் 25 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 25.8 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, செங்கத்தில் 7.4, போளூரில் 2.8, ஜமுனாமரத்தூரில் 3.2, கலசப்பாக்கத்தில் 10, தண்டராம்பட்டில் 5.2 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, அத்தியந்தல், கீழ்நாச்சிப்பட்டு, மல்லவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.