ஆரணியில் தவெக அலுவலகம் திறப்பு
ஆரணி: ஆரணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் நடைபெற்ற தவெக அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் சத்யா தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலா் புஸ்ஸிஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
மேலும் ஏழை பெண்களுக்கு அவா் சேலைகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சத்தியராஜ், பொருளாளா் அசோக்குமாா், துணைச் செயலா் கற்பகம், மாவட்ட நெசவாளா் அணி ராஜதுரை, விவசாய அணி ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.