செய்திகள் :

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

post image

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். இதில், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிக்கு முரணாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த குழுவை அமைத்து அரசு ஊழியா்களை தமிழக அரசு ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைக் கண்டிக்கிறோம். மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ ஜியோ’ சாா்பில் வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ள வட்டார அளவிலான ஆா்ப்பாட்டம், 25-ஆம் தேதி மாவட்ட தலைநகா்களில் நடைபெற உள்ள சாலை மறியலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க