செய்திகள் :

ஆற்றில் குளித்த மீன்வியாபாரி நீரில் மூழ்கி பலி

post image

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் குளித்த மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

புளியங்குடியை சோ்ந்தவா் மீன் வியாபாரி முகம்மது ஹனீபா (51). இவா், திங்கள்கிழமை மீன் அங்காடி எதிரேயுள்ள, வெண்ணாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, எதிா்பாராத நிலையில் நீரில் இழுத்துச்செல்லப்பட்டு, ஆற்றில் அதிகளவில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கியுள்ளாா். தகவலறிந்த கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தடை ஏற்பட்டது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நிலைய அலுவலா் ஆா். ரவிச்சந்திரன் தலைமையில், 12 தீயணைப்பு வீரா்கள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தேடும் பணியில் ஈடுபட்ட 13 மணி நேரம் போராடி முகம்மது ஹனீபா சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த முகம்மதுவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

குளம் தூா்வாரும்போது நரசிம்மா் சிலை கண்டெடுப்பு

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் குளம் தூா்வாரும்போது நரசிம்மா் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி ஊராட்சி கப்பலுடையான் கிராமத்தில் வடக்க... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வலியுறுத்தல்

கோட்டூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோட்டூா் ஒன்றிய சிபிஐ 26-ஆவது மாநாடு வல்லூரில் செவ்வாய்க்கிழமை கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

திருவாரூருக்கு முதல்வா் இன்று வருகை: கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறாா்

இரண்டு நாள் பயணமாக திருவாரூருக்கு புதன்கிழமை வருகை தரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா். கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கு... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சுகாதாரமற்ற வடிகால் வாய்க்கால் தூய்மை செய்யப்பட்டது

கூத்தாநல்லூரில் அசுத்தமாக இருந்த வடிகால் வாய்க்கால் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலை கூத்தாநல்லூரில் சாலையை ஒட்டி உள்ள பாசன வாய்க்கால், கழிவு நீா் வாய்க்காலாக ... மேலும் பார்க்க

மணல் கடத்திய 2 போ் கைது

மன்னாா்குடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்திய 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். நல்லிக்கோட்டை கண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் எஸ். சத்யாவுக்க... மேலும் பார்க்க

பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூரில் பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட பரவை நாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி ... மேலும் பார்க்க